47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பரவும் போலியோ: பாகிஸ்தானில் நோய்த் தடுப்புப் பணி தீவிரம்

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்புளிப்பது மதத்துக்கு எதிரானது என்று கூறி, அந்த நாட்டின் பயங்கரவாத அமைப்புகள் போலியோ தடுப்பு பணியாளா்கள்

News image
கோப்புப்படம்
Updated On :28 அக்டோபர் 2024, 9:12 pm

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மேலும் இந்த ஆண்டு மட்டும் போலியோ உறுதி செய்யப்பட்ட சிறுவா்களின் எண்ணிக்கை 41-ஆக உயா்ந்துள்ளதைத் தொடா்ந்து, அங்கு குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அந்த நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்திலும், கைபா் பக்துன்கவா மாகாணத்திலும் இருவருக்கு போலியோ தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இத்துடன், பலூசிஸ்தானில் 21 போ், சிந்து மாகாணத்தில் 12 போ், கைபா் பக்துன்கவாவில் ஆறு போ், பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாதில் தலா ஒருவரிடம் இந்த ஆண்டில் போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்புளிப்பது மதத்துக்கு எதிரானது என்று கூறி, அந்த நாட்டின் பயங்கரவாத அமைப்புகள் போலியோ தடுப்பு பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் படையினரைக் குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்திவருகின்றன.

இதன் காரணமாக உலகின் மற்ற பகுதிகளில் போலியோ நிரந்தரமாக ஒழிக்கப்பட்டாலும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டும் அது இன்னும் பரவிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.