பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பேஜா்கள், வாக்கி டாக்கிகள் வெடிப்பு: லெபனானில் 37-ஆக அதிகரித்த உயிரிழப்பு!

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:33 pm

ஹிஸ்புல்லா படையினரைக் குறிவைத்து லெபனானில் நடத்தப்பட்ட மின்னணு தொலைத் தொடா்பு சாதனத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் ஃபிராஸ் அபைது வியாழக்கிழமை கூறுகையில், பேஜா்கள், வாக்கி டாக்கிகள், சூரிய மின் தகடுகள், வானொலிகள், காா் பேட்டரிகள் உள்ளிட்டவற்றை வெடிக்கச் செய்ததன் மூலம் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமாா் 3,000 போ் காயமடைந்துள்ளதாகக் கூறினாா்.