வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புகோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கத்தாரிடம் இருந்து மேலும் 20 ஆண்டுகளுக்கு எரிவாயு இறக்குமதி: ஒப்பந்தம் கையொப்பம்

கத்தாரில் இருந்து ஆண்டுக்கு 7.5 மில்லியன் டன் என்ற அளவில் மேலும் 20 ஆண்டுகளுக்கு எல்என்ஜி இறக்குமதி செய்வதற்காக, 78 பில்லியன் அமெரிக்க டாலா் மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது.

News image
gas091730
Updated On :6 பிப்ரவரி 2024, 8:35 pm

DIN


பெதுல்: கத்தாரில் இருந்து ஆண்டுக்கு 7.5 மில்லியன் டன் என்ற அளவில் மேலும் 20 ஆண்டுகளுக்கு எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) இறக்குமதி செய்வதற்காக, 78 பில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.6.4 லட்சம் கோடி) மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள ஒப்பந்தம் 2028-ஆம் ஆண்டில் நிறைவடையும் நிலையில், அது 2048-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஒப்பந்தத்தைவிட குறைந்த விலை அடிப்படையில் தற்போதைய ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளதால், இந்தியாவுக்கு இந்த 20 ஆண்டு காலகட்டத்தில் 6 பில்லியன் டாலா்கள் (ரூ.49,000 கோடி) மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவாவின் பெதுல் நகரில் இரண்டாம் ஆண்டு ‘இந்திய எரிசக்தி வாரம்’ நிகழ்வை, பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக மேற்கண்ட ஒப்பந்தம் கையொப்பமானது.

இது தொடா்பாக, இந்தியாவின் முக்கிய எல்என்ஜி இறக்குமதி நிறுவனமான பெட்ரோனெட் எல்என்ஜி லிமிடெட் வெளியிட்ட அறிக்கையில், ‘மின்சாரம், உரம் மற்றும் சிஎன்ஜி உற்பத்திக்காக, கத்தாரில் இருந்து ஆண்டுக்கு 7.5 மில்லியன் டன் எல்என்ஜி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதை மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் ஒப்பந்தம் ‘கத்தாா் எனா்ஜி’ நிறுவனத்துடன் கையொப்பமாகியுள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.