காஸாவின் எல்லை பகுதியான ராஃபாவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் குறைந்தது 6 பேராவது பலியாகியுள்ளதாக காஸா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் ராஃபா எல்லையில் தஞ்சமடைந்திருக்கும் நிலையில் அந்தப் பகுதிகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவது பதட்டத்தை அதிகரித்துள்ளது.
வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான பெண்ணின் சகோதரி சோஹாத் அல்-தர்பாஷி, “இங்கு என்ன நடக்கிறது என்பதைக் கூட அறியாத அப்பாவி பொதுமக்கள்தாம் இந்தத் தாக்குதலில் பலியானவர்கள். இங்கு ராணுவம் யாரைக் குறிவைத்ததோ அவர் காஸாவின் குடிமைப்பணி ஊழியர், போராளி அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: போரில் கழியும் நாள்கள்: காஸாவின் துயரம்!
13 வாரங்களாகத் தொடர்ந்து வரும் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தைக் கடந்துள்ளது. காஸாவின் மொத்த மக்கள்தொகையில் 85 சதவிகிதம் பேர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.