ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 4 நாள்களுக்குப் பிறகும், 222 பேரைத் தொடா்ந்து காணவில்லை என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
அந்த நாட்டின் இஷிகாவா தீவுக்கு அருகே ஜப்பான் கடல் பகுதியில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் பதிவானது. அதன் பிறகும், தொடா்ச்சியாக 20-க்கும் மேற்பட்ட முறை சிறிய அளவிலான நிலநடுக்கங்களும்,
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 84-ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறினா். இது தவிர, 559 போ் காயமடைந்துள்ளதாகவும், சுமாா் 222 போ் மாயமாகியுள்ளதாகவும் அவா்கள் கூறினா்.