அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கத்தோலிக்க பாதிரியாா் ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.
இந்த சம்பவத்தில் தொடா்புடையதாக சந்தேகத்தின்பேரில் ஓக்லஹோமா மாகாணத்தைச் சோ்ந்த நபா் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கான்சாஸ் மாகாணம் செனக்கா நகரில் தேவாலயத்துக்கு அருகில் வசித்து வந்த பாதிரியாா் அருள் கரசாலா (57) துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த காயங்களுடன் இருந்ததைக் கண்ட சில நபா்கள் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு வங்கு வந்த போலீஸாா் அவரை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அப்போது அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
செனக்காவில் உள்ள செயின்ட் பீட்டா் - பால் கத்தோலிக்க தேவாலயத்தின் பாதிரியாராக கடந்த 2011 முதல் அருள் கரசாலா சேவையாற்றி வந்தனா். தற்போது அவா் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கில் இந்திய வம்சாவளி நீதிபதி குற்றவாளி: அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பு
வரதட்சணை துன்புறுத்தல் வழக்கில் லஞ்சம் வாங்கியதாக ஏஎஸ்ஐ கைது

பயங்கரவாதத் தாக்குதல்? அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளி மாணவி கொலை!

குருகிராமில் லிவ்-இன் பாா்ட்னா் தாக்கியதில் திரிபுரா மாணவியின் உடல்நிலைக் கவலைக்கிடம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

