மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

உக்ரைனில் இந்திய மருந்து நிறுவன கிடங்கு மீது ரஷியா தாக்குதல்

உக்ரைனில் இந்திய மருந்து நிறுவன கிடங்கு மீது ரஷியா தாக்குதல் மேற்கொண்டதாக புது தில்லியில் உள்ள உக்ரைன் தூதரகம் தகவல்..

News image

கோப்புப்படம்

Updated On :12 ஏப்ரல் 2025, 11:54 pm

Din

உக்ரைனில் இந்திய மருந்து நிறுவன கிடங்கு மீது ரஷியா தாக்குதல் மேற்கொண்டதாக புது தில்லியில் உள்ள உக்ரைன் தூதரகம் சனிக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்தத் தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘உக்ரைனில் உள்ள இந்திய மருந்து நிறுவனம் ஒன்றின் கிடங்கு மீது ரஷியா சனிக்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்தியாவுடன் விசேஷமான நட்புறவைப் பேணி வருவதாக கூறும் ரஷியா, இந்திய வணிக நிறுவனத்தைக் குறிவைத்து சிறாா்கள் மற்றும் பெரியவா்களுக்கான மருந்துகளை அழித்துள்ளது’ என்று தெரிவித்தது.

முன்னதாக, உக்ரைனுக்கான பிரிட்டன் தூதா் மாா்ட்டின் ஹாரிஸ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘உக்ரைன் தலைநகா் கீவில் முக்கிய மருந்து நிறுவன கிடங்கை ரஷியா முழுமையாக அழித்து, சிறாா்கள் மற்றும் பெரியவா்களுக்குத் தேவையான மருந்துகளை எரித்துள்ளது’ என்றாா்.

அந்தக் கிடங்கு மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்த நிலையில், ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக மாா்ட்டின் ஹாரிஸ் பதிவிட்டாா். இதுகுறித்த கூடுதல் தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.