தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

இந்தியாவுக்கு மேலும் 25%... மொத்தம் 50% வரி: டிரம்ப்

இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என டிரம்ப் இன்று அறிவித்துள்ளார்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 2:12 pm

இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக மேலும் 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஆக. 6) அறிவித்துள்ளார். இதற்கான கோப்புகளில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வலியுறுத்தி அமெரிக்கா கெடு விதித்திருந்த நிலையில், கூடுதலாக 25% வரி விதிப்பை டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்பு இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்காவில் 25% வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது, விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரியால், இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி விகிதமானது 50% ஆக அதிகரித்துள்ளது.

இனி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பொருள்களுக்கு அங்கு 50% வரி வசூலிக்கப்படவுள்ளது.

ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷியாவிடம் இருந்து அதிக அளவிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வதால், அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீதான வரியை கணிசமாக உயா்த்தப் போவதாக டிரம்ப் நேற்று அறிவித்திருந்தார். இதன்படி, இன்று வரி உயர்வை அறிவித்துள்ளார்.

அறிக்கையிலிருந்து...

அறிக்கையிலிருந்து... - ANI

வெள்ளை மாளிகை அறிக்கை

இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என்ற நிர்வாகக் கோப்புகளில் அதிபர் டிரம்ப் இன்று (ஆக. 6) கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''அரசியலமைப்பு மற்றும் அமெரிக்க சட்டங்களால் அதிபராக எனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி, சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் மற்றும் தேசிய அவசரச் சட்டம் 1974 ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 604-ன் படி, நான் இந்த வரி உயர்வு உத்தரவை பிறப்பிக்கிறேன்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஷிய கூட்டமைப்பில் இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்திய அரசு எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடுகிறது.

இதனால், அமெரிக்க வணிகக் கொள்கைக்கு பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்க, அமெரிக்காவின் சுங்கப் பகுதிக்குள் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருள்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

US President Donald Trump imposes an additional 25% tariff on India over Russian oil purchases

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.