விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பாகிஸ்தானில் 9 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து...

News image
கோப்புப் படம்
Updated On :6 டிசம்பர் 2025, 10:32 am

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானில், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் தடை செய்யப்பட்ட தலிபான் அமைப்பைச் சேர்ந்த 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைபர் பக்துன்குவா மாகாணத்தின் கைபர், டேங்க் மற்றும் லக்கி மார்வாட் ஆகிய மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (டிச. 5) பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சோதனைகளில், அப்பகுதிகளில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தாக்குதலில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் எனும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் சில நாள்களுக்கு முன்பு பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசு உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு முறித்துக் கொண்டது. அதன்பின்னர், பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மற்றும் பலூசிஸ்தான் ஆகிய மாகாணங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

In Pakistan, 9 terrorists from the banned Taliban organization have been reportedly killed in the Khyber Pakhtunkhwa province.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.