தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கைவிடப்பட்ட ரயில் நிலையத்தில் நியூயார்க் மேயராக ஸோரான் மம்தானி நாளை பதவியேற்பு!

நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி நாளை பதவியேற்பு...

நியூயார்க் மேயராக ஸோரான் மம்தானி நாளை பதவியேற்பு... - Insta/zohran mamdani

Published On :

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தின் புதிய மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி வியாழக்கிழமை (ஜன.01) பதவியேற்கிறார்.

அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி.

இந்த நிலையில், புத்தாண்டு நாளான வியாழனன்று நியூயார்க்கின் புதிய மேயராக ஸோரான் மம்தானி பதவியேற்கவுள்ளார். அமெரிக்காவின் மூத்த அரசியல் தலைவர் பெர்னி சான்ட்னர்ஸ் மம்தானிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மம்தானி மற்றும் அவரது நிர்வாகக் குழுவினரின் பதவியேற்பு விழா நியூயார்க்கில் கைவிடப்பட்ட வரலாற்று சிறப்புடைய பழைய சிட்டி ஹால் சுரங்கப் பாதை ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முன்னதாக, அமெரிக்க இளைஞர்கள் இடையில் மிகவும் பிரபலமாக அறியப்படும் 34 வயதான ஸோரான் மம்தானி, நியூயார்க் நகரின் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றும் முதல் முஸ்லிம் மேயர் எனும் பெருமையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.