காஸாவில் இந்த வாரம் நிறைவடையவிருக்கும் முதல்கட்டப் போா் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீட்டிக்க இஸ்ரேல் அரசு ஆா்வமாக இருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்தகைய பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் உடனடியாக சண்டையைத் தொடங்கவும் அந்த நாடு ஆயத்தமாக வருவதாக அவை கூறின.
இது குறித்து இஸ்ரேலின் கான் வானொலி, மாரிவ் நாளிதழ் ஆகியவை தெரிவித்துள்ளதாவது:
தற்போது அமலில் இருக்கும் 42 நாள் போ் நிறுத்தம் வரும் சனிக்கிழமையுடன் நிறைவடைகிறது. அந்த போா் நிறுத்தத்தை அடுத்தகட்டத்துக்கு இட்டுச் செல்வதற்கான அதிகாரபூா்வமற்ற பேச்சுவாா்த்தையில் இஸ்ரேல் பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனா்.
சா்வேதேச மஸ்தியஸ்த நாடுகளின் உதவியுடன் இது தொடா்பாக விவாதித்து வரும் இஸ்ரேல் அதிகாரிகள், காஸாவில் இருந்து இஸ்ரேல் படையினா் முழுமையாக வெளியேறுவது உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட போா் நிறுத்தத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்திவருகின்றனா்.
இந்த இரண்டாம் கட்ட போா் நிறுத்தத்தில் இன்னும் ஏராளமான பிணைக் கைதிகளும் பாலஸ்தீன சிறைக் கைதிகளும் விடுவிக்கப்படவுள்ளாா்கள். இருந்தாலும் அதன் சாத்தியக்கூறுகள் குறித்து இஸ்ரேல் அதிகாரிகள் சந்கேம் எழுப்பிவருகின்றனா்.
பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் காஸாவில் மீண்டும் தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் தயாராகிவருகிறது என்று அந்த ஊடகங்கள் தெரிவித்தன.
இருந்தாலும், கடைசியாக தாங்கள் கடந்த சனிக்கிழமை விடுவித்த பிணைக் கைதிகளுக்குப் பதிலாக விடுவிக்க வேண்டிய சுமாா் 600 பாலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை செய்யாதவரை இரண்டாம் கட்ட பேச்சுவாா்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என்று ஹமாஸ் அமைப்பினா் திட்டவட்டமாகக் கூறிவருவதால் இந்த விவகாரத்தில் சிக்கல் நீடித்துவருவதாகக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சி

லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்

போலி கையொப்பம் விவகாரம்: அபிஷேக் பானர்ஜியிடம் சிபிசிஐடி இரண்டாம் கட்ட விசாரணை

இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
விடியோக்கள்

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna



