வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!

ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

News image

ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் ஹசம் ஷாவான்

Updated On :2 ஜனவரி 2025, 10:03 pm IST

ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

தெற்கு காஸாவின் கான் யூனிஸில் உள்ள பகுதியில் உளவுத்துறை அடிப்படையில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் ஹசம் ஷாவான் வியாழக்கிழமை கொல்லப்பட்டார்.

இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்தப் பதிவில், “தெற்கு காஸாவில் உள்ள ஹமாஸ் உள்நாட்டுப் பாதுகாப்புப் படையின் தலைவர், தீவிரவாதியான ஹசம் ஷாவான், கான் யூனிஸில் உள்ள மக்கள் வாழும் பகுதியில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்திய தாக்குதலில் வியாழக்கிழமை கொல்லப்பட்டார்.

காஸாவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைத் தாக்குதல்களில் ஹமாஸின் ராணுவப் பிரிவுடன் ஷாவான் இணைந்து செயல்பட்டு வந்தார்” எனக் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், இந்த வார தொடக்கத்தில், ஹமாஸ் படைப்பிரிவின் தளபதி அப்துல்-ஹாதி சபா கொல்லப்பட்டார். 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு சபா தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.