டொனால்ட் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்ட பாலியல் வழக்கின் விசாரணை வருகிற 10 ஆம் தேதியில் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.
அமெரிக்காவில் 2016 ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் மீது அமெரிக்க நடிகை பாலியல் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து, நடிகையை அமைதிப்படுத்துவதற்காக, தனது வழக்குரைஞரிடம் பணம் கொடுத்து, நடிகையிடம் கொடுக்கச் சொல்லியுள்ளார், டிரம்ப். மேலும், வழக்குரைஞர் கட்டணம் என்று பொய்கூறி, பொய்க்கணக்கு காட்டியுள்ளார். அமெரிக்கச் சட்டப்படி, பொய்க்கணக்கு காட்டுவது குற்றமே. இதனால், அவர்மீது 34 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையில் வருகிற 10 ஆம் தேதியில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இந்த வழக்கில் சிறைத் தண்டனை வழங்கப்பட வாய்ப்புகள் இருப்பதாலேயே அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதில் டிரம்ப் மும்முரம் காட்டியதாகவும் சிலர் கூறுகின்றனர். இருப்பினும், அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், தற்போது அவருக்கு சிறைத் தண்டனையைவிட அபராதம் மட்டுமே விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, டிரம்ப்புக்கு சிறைத் தண்டனை, நன்னடத்தை சோதனை அல்லது அபராதம் விதிக்க மாட்டேன் என்று நீதிபதி சமிக்ஞை செய்தார்,
இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து மறுத்து வரும் டிரம்ப், குற்றச்சாட்டைச் சட்டவிரோதமான அரசியல் தாக்குதல் என்றும், ஒரு மோசடி நகைச்சுவை என்றும் விமர்சித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நரகக்குழி குறித்த கருத்து: டிரம்ப்புக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் போராட்டம்

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர்கள் 9 பேருக்கும் மரண தண்டனை!

சாத்தான்குளம்: நீதிபதி முன்பு கண்ணீர் விட்டு அழுத ஜெயராஜ்- ஃபென்னிக்ஸ் குடும்பத்தினர்!
வீதிகளில் திரண்ட 80 லட்சம் அமெரிக்கர்கள்.. ‘நோ கிங்ஸ்’ போராட்டம் விடுக்கும் சமிக்ஞை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


