/
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஜப்பானில் உள்ளூர் நேரப்படி இரவு 9.19 மணிக்கு கியூஷுவில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மியாசாகி மையப்பகுதி 30 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. கொச்சி மற்றும் மியாசாகியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதன் அதிா்வுகள் மியாசாகி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










