தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

காட்டுத்தீக்கு இரையாகும் வீடுகளைப் பாதுகாக்க ஒரு மணி நேரத்துக்கு ரூ.1.7 லட்சம்!

காட்டுத்தீக்கு இரையாகும் வீடுகளைப் பாதுகாக்க ஒரு மணி நேரத்துக்கு ரூ.1.7 லட்சம் செலவிடும் லாஸ் ஏஞ்சலீஸ் கோடீஸ்வரர்கள்..

News image

மீட்புப் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர். - படம் | ap

Updated On :13 ஜனவரி 2025, 9:53 am

அமெரிக்காவில் காட்டுத்தீக்கு இரையாகும் வீடுகளைப் பாதுகாக்க, லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1.7 லட்சம் வரை செலவிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லாஸ் ஏஞ்சலீஸின் ஹாலிவுட் பகுதியில் முன்னணி திரைப்பட நிறுவனங்கள் மற்றும் திரைப்பட நகரங்கள் அமைந்துள்ளன. ஜனவரி 7-ஆம் தேதி லாஸ் ஏஞ்சலீஸின் பாலிசேட்ஸ் பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவியது.

7 நாள்களாக பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வனப்பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வரும் தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

கலிபோர்னியா முழுவதும் பல காட்டுத்தீகள் பரவி வருவதால், லாஸ் ஏஞ்சலீஸின் மில்லியனர்கள் பிரத்யேகமான தனியார் தீயணைப்பு சேவைகளை நாடியுள்ளனர்.

பொது தீயணைப்புத் துறைகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால், சில கோடீஸ்வரர்கள் ஒரு மணி நேரத்திற்கு 2,000 டாலர்கள் (சுமார் ரூ.1.7 லட்சம்) செலுத்தி தனியார் நிறுவனங்கள் மூலமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தனியார் தீயணைப்பு வீரர்கள் மழைத் துளி விழுவதுபோல செயற்கையான ஸ்பிரிங்லர்களை அமைத்து தண்ணீரை செலுத்தி வீடுகளைத் தீப்பிடிக்காத வண்ணம் பாதுகாப்பார்கள்.

இந்த நிறுவனங்கள் தீத்தடுப்பு மருந்துகளை வீடுகள் மீது தெளித்தும், மரங்களை தீப்பிடிக்காத வகையில் பாதுகாக்கும் ஜெல் சேவைகளையும் வழங்குகின்றன.

லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத் தீயில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர். தீயில் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தன. மேலும் காட்டுத்தீயில் இருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான மக்களை வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத்தீயினால் 135 பில்லியன் முதல் 150 பில்லியன் டாலர் வரை சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.