நேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 16-ஆக அதிகரிப்பு

News image

ஹெலிகாப்டா் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து அணைக்கப்படும் காட்டூத் தீ.

Updated On :12 ஜனவரி 2025, 9:49 pm

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ பரவி வருகிறது. இந்தக் காட்டுத் தீயில் சிக்கி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என 12,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. அங்கிருந்து 10,000-க்கும் மேற்பட்டவா்கள் வெளியேற்றப்பட்டுள்ளனா்.

காட்டுத் தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. ஆனால், காற்று கடுமையாக வீசியதே காட்டுத் தீ அதிவேகமாகப் பரவியதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது காற்றின் வேகம் சற்று குறைந்துள்ள நிலையில், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். எனினும் காற்று மீண்டும் வலுவடையக் கூடும் என்று அந்நாட்டின் தேசிய வானிலை சேவை மையம் எச்சரித்துள்ளது.

காட்டுத் தீயில் சிக்கி ஏற்கெனவே 11 போ் உயிரிழந்த நிலையில், மேலும் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது என்று லாஸ் ஏஞ்சலீஸ் மருத்துவ பரிசோதகா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சான் ஃபிரான்சிஸ்கோ பரப்பளவைவிட அதிகம்: காட்டுத் தீ 56 சதுர மைல்களை (145 சதுர கி.மீ.) அழித்துள்ளது. இது சான் ஃபிரான்சிஸ்கோ நகரின் பரப்பளவைவிட அதிகம்.

இந்தக் காட்டுத் தீயால் 135 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.11.63 லட்சம் கோடி) முதல் 150 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.12.92 லட்சம் கோடி) வரை பொருள் சேதம் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இதுவே காட்டுத் தீயால் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட அதிகபட்ச இழப்பாக இருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.