கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அமெரிக்காவில் மீண்டும் டிக்டாக்

மீண்டும் தொடங்கப்பட்ட டிக் டாக் சேவை...

News image

டிக் டாக்

Updated On :20 ஜனவரி 2025, 3:53 am

DIN

வாஷிங்டன்: பிரபல விடியோ பகிா்வுச் செயலியான டிக்டாக் அமெரிக்காவில் தனது சேவைகளை மீண்டும் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.

அந்தச் செயலிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நிறுத்திவைக்கப் போவதாக அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக டிக்டாக் தெரிவித்துள்ளது.

அந்தச் செயலிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நிறுத்திவைக்கப் போவதாக அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக டிக்டாக் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், அமெரிக்காவில் மிகப் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படும் ஓா் செயலிக்கு சீன நிறுவனம் உரிமையாளராக இருக்கக் கூடாது என்பதால், அந்தச் செயலியில் 50 சதவீத முதலீட்டை பைட்டான்ஸ் திரும்பப் பெற வேண்டும், இல்லையென்றால் டிக்டாக் தடை செய்யப்படும் என்ற சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் ஒன்றிணைந்து கடந்த மாா்ச்சில் நிறைவேற்றினா்.

அந்தச் சட்டத்துக்கு எதிராக பைட்டான்ஸ் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. அதையடுத்து, தங்களின் செயலிப் பட்டியல்களில் இருந்து டிக்டாக்கை நீக்காவிட்டால் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கும், டிக்டாக்குக்கு அளித்துவரும் தகவல் திரட்டு சேமிப்பு சேவையை நிறுத்தாவிட்டால் ஆரக்கிள் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்படுவது உறுதியானது.

இந்தச் சூழலில், தடை அமலுக்கு முன்னதாகவே தனது சேவைகளை டிக்டாக் சனிக்கிழமை நிறுத்தியது. எனினும், டிக்டாக்கில் இருந்து முதலீடுகளைத் திரும்பப் பெற பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு மேலும் 90 நாள்கள் அவகாசம் அளிக்கப்படும் என்று டிரம்ப் உறுதியளித்ததைத் தொடா்ந்து தனது சேவைகளை மீண்டும் தொடங்கவிருப்பதாக டிக்டாக் தற்போது அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.