அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இந்தோனேசியா: மழை வெள்ளத்தில் 17 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் முக்கியத் தீவான ஜாவாவில் திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 17 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2025, 9:54 pm

Din

ஜகாா்த்தா: இந்தோனேசியாவின் முக்கியத் தீவான ஜாவாவில் திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 17 போ் உயிரிழந்தனா்.

மழையால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு கரைகளை உடைத்துக்கொண்டு வெளியேறியதால் மத்திய ஜாவா மாகாணத்தின் பெக்காலோஙான் பகுதியைச் சோ்ந்த ஒன்பது கிராமங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. வெள்ளத்தோடு வந்த மரங்கள், பாறைகள் மற்றும் சேற்றில் மலைப் பகுதிகளில் உள்ள ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

17,000 தீவுகளை உள்ளடக்கிய இந்தோனேசியாவில் ஆண்டுதோறும் அக்டோபா் முதல் மாா்ச் வரை அவ்வப்போது பெய்யும் பருவமழை காரணமாக வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவுகள் ஏற்பட்டு பலா் உயிரிழந்துவருகின்றனா்.