நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

டீப்சீக் செயலிக்கு அமெரிக்கா தடை?

சீன நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான டீப்சீக்கை பயன்படுத்த அமெரிக்க காங்கிரஸ் அலுவலகத்தில் தடை

News image
Updated On :31 ஜனவரி 2025, 7:46 pm IST

சீன நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான டீப்சீக்கை பயன்படுத்த அமெரிக்க காங்கிரஸ் அலுவலகம் தடை விதித்துள்ளது.

அமெரிக்க காங்கிரஸ் அலுவலகத்தில் யாரும் செயற்கை நுண்ணறிவு தளமான டீப்சீக்கை போன் மற்றும் கணினியில் பதிவிறக்கவோ பயன்படுத்தவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவெ, அமெரிக்கா முழுவதும் சீனாவின் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் அலுவலகத்தில் டீப்சீக் செயலி தடை செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் பாதுகாப்புத் தகவல்கள் காரணமாக டிக்டாக் செயலி ஜனவரி 19 ஆம் தேதி முதல் அமெரிக்கா முழுவதும் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாம் ஆல்ட்மேன் என்ற அமெரிக்கரின் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தளத்தை கடந்த ஒருவார காலமாக பின்னுக்குத் தள்ளியது, சீன செயற்கை நுண்ணறிவு தளம் டீப்சீக். அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவார காலத்திலேயே அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கப்பட்ட செயலியாக டீப்சீக் உருவெடுத்துள்ளது.

சாட் ஜிபிடியில் புதிய பதிப்புகளை பயன்டுத்த, அதற்கென தனிக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், டீப்சீக் தளத்தில் அனைத்துமே இலவசமாக இருப்பது பயனர்களிடையே பெரிதும் விரும்பக்கூடியதாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.