ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கனடா அதன் தொழிலாளிகளை உறுதியாகப் பாதுகாக்கும்: அமெரிக்க வரி விதிப்புக்கு பிரதமர் கார்னி பதில்!

அமெரிக்காவின் வரி விதிப்புகள் குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி பேசியுள்ளதைப் பற்றி...

News image
மார்க் கார்னி - AP
Updated On :11 ஜூலை 2025, 10:24 am

இணையதளச் செய்திப் பிரிவு

கனடா மீது அமெரிக்கா அதிகப்படியான வரிகளை விதித்துள்ள நிலையில், கனடா அரசு அந்நாட்டிலுள்ள தொழிலாளிகள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்கும் என பிரதமர் மார்க் கார்னி உறுதியளித்துள்ளார்.

கனடா நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 35 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அது வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று (ஜூலை 10) தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, அதிபர் டிரம்ப் வெளியிட்டிருந்த கடிதத்தில், அமெரிக்காவிற்குள் ஃபெண்டானைல் எனப்படும் போதைப் பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க கனடா அரசு தவறிவிட்டதாகவும்; அதனால், விதிக்கப்பட்டுள்ள இந்த வரிகளை ஏற்காமல் கனடா வரி அதிகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவுடன் தற்போது மேற்கொண்டு வரும் வர்த்தக பேச்சுவார்த்தை முழுவதிலும், கனடா அரசு தனது தொழிலாளிகள் மற்றும் வணிகங்களை உறுதியாகப் பாதுகாத்து வருவதாக, கனடா பிரதமர் மார்க் கார்னி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வட அமெரிக்கா பகுதிகளில் போதைப் பொருள் கடத்தப்படுவதைத் தடுப்பதில் கனடா பல முக்கிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளதாகக் கூறிய அவர், அமெரிக்காவுடன் இணைந்து இருநாடுகளிலும் உள்ள மக்களையும், சமூகத்தையும் பாதுகாக்கத் தொடர்ந்து செயல்படுவதில் உறுதியாகவுள்ளதாகவும், கூறியுள்ளார்.

கடந்த சில நாள்களாக, தனது வர்த்தக போர் நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரப்படுத்தி வருகின்றார். ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கும் அவர் 50 சதவிகிதம் வரி விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

summary

Prime Minister Mark Carney has pledged that the Canadian government will protect workers and businesses in the country as the United States imposes high tariffs on Canada.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.