கடந்த 2023 அக்டோபா் 7-ல் ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து தொடங்கிய இந்தப் போரில், காஸா சுகாதார அமைச்சகத்தின்படி, 58,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா். இதில் பாதிக்கு மேல் பெண்களும் குழந்தைகளும் அடங்குவா். ஐ.நா.வின் அண்மைக்கால மதிப்பீட்டின்படி, காஸாவில் 59.8 சதவீத கட்டடங்கள் (சுமாா் 1,57,200 கட்டமைப்புகள்) அழிக்கப்பட்டுள்ளன அல்லது கடுமையாக சேதமடைந்துள்ளன. வடக்கு காஸாவில் இந்த எண்ணிக்கை 72 -ஆக உள்ளது. குறிப்பாக காஸா நகரம் மற்றும் ஜபாலியா அகதிகள் முகாமில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.