பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இஸ்ரேல் மீதான புதிய ஏவுகணைத் தாக்குதல் முறியடிப்பு! விமான நிலையம் தற்காலிக மூடல்!

இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து...

News image
கோப்புப் படம்- ஏபி
Updated On :19 ஜூலை 2025, 7:11 am

இணையதளச் செய்திப் பிரிவு

இஸ்ரேல் மீதான மற்றொரு புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக, அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

யேமனில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்ட மற்றொரு புதிய ஏவுகணைத் தாக்குதலை, அந்நாட்டு ராணுவம் தகர்த்துள்ளதாக நேற்று (ஜூலை 18) அறிவித்திருந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் மீதான புதியதொரு ஏவுகணைத் தாக்குதல் குறித்து அறிந்தது, அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அபாய ஒலி ஒலிக்கப்பட்டு, அனைவருக்கும் செல்போன் வாயிலாக எச்சரிக்கைச் செய்தி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, டெல் அவிவில் உள்ள பென் குரியன் பன்னாட்டு விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த, ஜூலை 16 ஆம் தேதி மாலை தென்கிழக்கு இஸ்ரேல் பகுதியின் மீது யேமனில் இருந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த ஏவுகணையை இஸ்ரேல் ராணுவம் முறியடித்தாகக் கூறப்பட்ட நிலையில், தாக்குதலுக்கு யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.