விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இஸ்ரேலின் தீர்மானத்துக்கு இந்தோனேசியா கண்டனம்!

மேற்கு கரை குறித்த இஸ்ரேலின் தீர்மானத்துக்கு இந்தோனேசியா அரசு கண்டனம் தெரிவித்துள்ளதைப் பற்றி...

News image
இந்தோனேசியா அதிபர் பிரபாவோ சுபியாந்தோ
Updated On :24 ஜூலை 2025, 3:20 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கு கரையை ஆக்கிரமித்து இணைக்க, இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு, இந்தோனேசியா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனர்களின் வெஸ்ட் பாங்க் என்ற அழைக்கப்படும் மேற்கு கரை நகரத்தை, ஆக்கிரமித்து இணைப்பதற்கு இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில், நேற்று (ஜூலை 23) தீர்மனம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் சட்ட ரீதியான தாக்கங்களைக் கொண்டிருக்காது எனக் கருதப்பட்டாலும், சர்வதேச நாடுகள் சில அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், பாலஸ்தீன பகுதிகளின் மீது இஸ்ரேலுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை எனக் கூறி, அந்நாட்டின் தீர்மானத்துக்கு இந்தோனேசியா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்தோனேசியாவின் வெளியுறவுத் துறை இன்று (ஜூலை 24) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

”இஸ்ரேலின் இந்த நடவடிக்கை, நிலப்பகுதிகளை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தக் கூடாது எனும் அடிப்படை கொள்கைகளை மீறியுள்ளது.

இரு மாநில தீர்மானத்துக்கு இணங்கி, கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராகக் கொண்ட, 1967-க்கு முந்தைய எல்லைகளுக்குள் பாலஸ்தீனத்தை நிறுவி, இறையாண்மைக் கொண்ட அரசை உருவாக்குவதற்கான எங்களது ஆதரவை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சர்வதேச நாடுகள் இணைந்து இஸ்ரேலின் சட்டவிரோத நடவடிக்கைகளை, உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இந்தோனேசிய அரசு வலியுறுத்தியுள்ளது.

summary

The Indonesian government has strongly condemned the resolution passed by the Israeli parliament to annex the West Bank.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.