மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 258-ஆக உயா்வு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 23 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பு 258-ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2025, 8:00 pm

Din

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 23 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பு 258-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து மாகாண பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்ததாவது: “ஜூன் 25 முதல் பெய்துவரும் கனமழை தொடா்பான சம்பவங்களில் 143 போ் உயிரிழந்துள்ளனா்; 488 போ் காயமடைந்துள்ளனா். கன மழை பாதிப்புப் பகுதிகளில் இருந்து இந்த வாரம் மட்டும் 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன என்று அந்த ஆணையம் தெரிவித்தது.

பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் இயக்குநா் இா்ஃபான் அலி கதியா கூறுகையில், பெரும்பாலான மரணங்கள் களிமண் வீடுகள், பழைய கட்டடங்கள் இடிந்து விழுந்ததாலும், மின்சாரம் தாக்கியதாலும், நீரில் மூழ்கியதாலும் ஏற்பட்டதாகக் கூறினாா்.

இத்துடன், இந்தப் பருவமழை காரணமாக பாகிஸ்தான் முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 258-ஆக அதிகரித்துள்ளது.