நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

போர்நிறுத்தத்தை மீறவில்லை! தாய்லாந்தின் குற்றச்சாட்டை மறுக்கும் கம்போடியா!

தாய்லாந்தின் குற்றச்சாட்டை கம்போடியா அரசு மறுத்துள்ளதைப் பற்றி...

News image

தாய்லாந்து - கம்போடியா இடையிலான மோதல்களினால், ஏராளமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி புத்த மடங்களில் தங்கியுள்ளனர். - ஏபி

Updated On :29 ஜூலை 2025, 7:48 am

கம்போடியா ராணுவம் போர்நிறுத்தத்தை மீறியதாக, தாய்லாந்து பிரதமரின் குற்றச்சாட்டுக்கு, கம்போடியாவின் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில், எல்லைப் பிரச்னைக் காரணமாக, கடந்த வாரம் போர் தொடங்கியது. இருநாட்டுப் படைகளும், எல்லைப் பகுதியில் கடுமையாக மோதிக்கொண்டதில், சுமார் 32 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான, அமைதிப் பேச்சுவார்த்தைகளின் மூலம் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை இருநாடுகளும் ஏற்றுக்கொண்டதாக, நேற்று (ஜூலை 28) அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், போர்நிறுத்தத்தை மீறி, கம்போடியாவின் ஒழுக்கமற்ற ராணுவ வீரர்கள் சிலர், தாக்குதலில் ஈடுப்பட்டதாகவும்; அதற்கு தாங்கள் கொடுத்த பதிலடியின் மூலம் நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், தாய்லாந்தின் இடைக்கால பிரதமர் பும்தம் வெசாயாசய் இன்று (ஜூலை 29) தெரிவித்துள்ளார்.

இதனை முற்றிலும் மறுத்த கம்போடியாவின் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சகம், நேற்று நள்ளிரவு முதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்தை தாங்கள் முற்றிலும் அமல்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது.

முன்னதாக, 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹிந்து கோயில் அமைந்துள்ள ப்ரே விஹேர் பகுதியை மையமாகக் கொண்டு தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையில் நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Cambodia's Ministry of National Defense has denied the Thai Prime Minister's accusation that the Cambodian army violated the ceasefire.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.