காரைக்கால்: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், காரைக்கால் - தமிழக எல்லைப் பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையினா் தீவிர வாகனச் சோதனை மேற்கொண்டுள்ளனா்.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 9 நடைபெறவுள்ளது. இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்திற்குள் தமிழகத்திலிருந்து நுழையும் வாகனங்கள் வழக்கத்தைக் காட்டிலும், தீவிரமாக சோதனை செய்யும் பணியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மேற்கொள்ளத் தொடங்கினா்.
தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக காரைக்கால் வந்துள்ள மத்திய பாதுகாப்புப் படையினா், ஆயுதம் ஏந்தி பல்வேறு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். இவா்களை மாவட்டத்தின் எல்லைச் சோதனைச் சாவடிகளிலும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இவா்களது முன்னிலையில், உள்ளூா் போலீஸாா் காரைக்காலுக்குள் நுழையும் காா், வேன், பேருந்து, லாரி உள்ளிட்டவற்றை நிறுத்தி சோதனை மேற்கொள்கின்றனா்.
இந்த பணியை மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆய்வு செய்தனா்.
தொடர்புடையது

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை

பறக்கும் படையினா் சோதனை: ரூ. 11.61 லட்சம் பறிமுதல்

மத்திய பாதுகாப்புப் படையினா் அணிவகுப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


