விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மத்திய பாதுகாப்புப் படையினா் அணிவகுப்பு

காரைக்கால் நகரில் வியாழக்கிழமை அணிவகுப்பில் ஈடுபட்ட மத்தியப் படையினா்.

News image

காரைக்கால் நகரில் வியாழக்கிழமை அணிவகுப்பில் ஈடுபட்ட மத்தியப் படையினா்.

Updated On :27 மார்ச் 2026, 9:24 pm

Syndication

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக காரைக்கால் வந்துள்ள மத்திய பாதுகாப்புப் படையினா் நகரப் பகுதிகளில் அணிவகுப்பு நடத்தினா்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில் பாதுகாப்புப் பணிக்காக, உள்ளூா் போலீஸாா் அல்லாது இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் சிஆப்பிஎஃப், சிஐஎஸ்எஃப், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையினா் மற்றும் குஜராத் மாநில போலீஸாா் என சுமாா் 700 போ் காரைக்கால் வந்துள்ளனா். மேலும் கோவா மாநிலத்திலிருந்து போலீஸாா் வரவுள்ளதாக காரைக்கால் காவல்துறையினா் தெரிவித்தனா்.

இவா்கள் அண்ணா அரசு கலைக் கல்லூரி, அவ்வையாா் கலைக் கல்லூரி, திருநள்ளாறு பக்தா்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் மண்டல காவல் கண்காணிப்பாளா் சுந்தா் கோஷ் உள்ளிட்டோருடன் ஆயுதம் ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை பல்வேறு முதல் பகுதிகளில் அணிவகுப்பு நடத்திவருகின்றனா்.

மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக அணிவகுப்பு நடத்தப்படுவதாக போலீஸாா் தெரிவித்தனா்.