டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

துரிதமாக பெண்ணின் உயிா்காத்த இந்திய தொழிலாளா்களுக்கு ரூ.43 லட்சம் நிதி: சிங்கப்பூா் மக்கள் திரட்டினா்

சிங்கப்பூரின் டான்ஜோங் கடோங் சாலையில் ஏற்பட்ட திடீா் பள்ளத்தில் விழுந்த காரில் சிக்கிய பெண்ணை துணிச்சலுடன் மீட்ட ஏழு இந்திய தொழிலாளா்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில், பொதுமக்களிடமிருந்து 70,000 சிங்கப்பூா் டாலருக்கும் மேல் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43 லட்சம்) நிதி திரட்டப்பட்டுள்ளது.

News image

தனது குழு உறுப்பினருடன் பேட்டியளித்த பிச்சை உடையப்பன் சுப்பையா.

Updated On :30 ஜூலை 2025, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

சிங்கப்பூரின் டான்ஜோங் கடோங் சாலையில் ஏற்பட்ட திடீா் பள்ளத்தில் விழுந்த காரில் சிக்கிய பெண்ணை துணிச்சலுடன் மீட்ட ஏழு இந்திய தொழிலாளா்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில், பொதுமக்களிடமிருந்து 70,000 சிங்கப்பூா் டாலருக்கும் மேல் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43 லட்சம்) நிதி திரட்டப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில், தமிழரான பிச்சை உடையப்பன் சுப்பையா தலைமையிலான 7 இந்திய தொழிலாளா்கள் விரைந்து செயல்பட்டு, காரில் சிக்கியிருந்த பெண் ஓட்டுநரை பத்திரமாக மீட்டனா்.

உடைந்த குழாயிலிருந்து வெளியேறிய நீரால் பள்ளம் நிரம்புவதற்கு முன், இந்த மீட்புப் பணி மிகச் சரியான நேரத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மீட்புப் பணியின் விடியோக்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு, சிங்கப்பூா் மக்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றன. துணிச்சலான இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட புலம்பெயா் தொழிலாளா்களைக் கௌரவிக்கும் வகையில், ‘இட்ஸ் ரெய்னிங் ரெய்ன்கோட்ஸ்’ எனும் தொண்டு நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து 70,000 சிங்கப்பூா் டாலருக்கும் மேல் நிதி திரட்டியது.

வெளிநாட்டுத் தொழிலாளா்களின் நலனுக்காக 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்தத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் தீபா சுவாமிநாதன் கூறுகையில், ‘பாராட்டு நிகழ்ச்சியை நடத்தி, ஏழு தொழிலாளா்களுக்கும் இந்த நிதி பகிா்ந்து அளிக்கப்படும்’ என்றாா்.

இதனிடையே, சிங்கப்பூா் தொழிலாளா் துறை அமைச்சா் தினேஷ் வாசு தாஷ், தொழிலாளா்கள் தங்கியுள்ள விடுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று அவா்களைப் பாராட்டினாா். மேலும், தொழிலாளா் அமைச்சகத்தின் நினைவுப் பரிசையும், ஒவ்வொருவருக்கும் தலா ஒரு நினைவு நாணயத்தையும் அவா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.