தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

முன்பே வெளியேறிவிட்டோம்: அமெரிக்க தாக்குதல் குறித்து ஈரான்!

அமெரிக்காவால் எந்த சேதமும் இல்லை என ஈரான் தெரிவித்தது குறித்து....

News image

பி2 பாம்பர்ஸ் - கோப்புப்படம்

Updated On :22 ஜூன் 2025, 9:28 am

அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்க நடத்திய தாக்குதலுக்கு முன்னரே நாங்கள் பாதுகாப்பாக வெளியேறிவிட்டோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே 8 நாள்களுக்கு மேலாக போர் நிலவி வரும் நிலையில், நேற்று(ஜூன் 21) ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியாகவும் போர் விமானங்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று அறிவித்தார்.

”ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளித்தேன். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அணுசக்தி நிலையங்களை குறிவைத்து நடத்திய தாக்குதலுக்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேறி விட்டோம். அணுசக்தி நிலையங்களில் ஏதும் இல்லை, அங்கிருந்ததை பாதுகாப்பாக அகற்றி விட்டோம். இதனால் மிகப்பெரிய சேதத்தை சந்திக்கவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் அணுசக்தி பாதுகாப்பு அமைப்பு மையத்தின் தலைவர் கூறுகையில், அணுசக்தி நிலையங்கள் மீது குறிவைத்து நடந்த தாக்குதலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக, அணுசக்தி நிலையங்களில் எவ்வித கதிர்வீச்சு கசிவு, கதிரியக்க மாசுபாடு ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

அமெரிக்க தாக்குதல்களுக்குப் பிறகு வளைகுடா பிராந்தியத்தில் "எந்த கதிரியக்க கசிவும் கண்டறியப்படவில்லை" என்று செளதி ஒழுங்குமுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.