கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆப்கானிஸ்தானில் 75 பேருக்கு செயற்கை கால்கள்: இந்தியா மனிதாபிமான உதவி

ஆப்கானிஸ்தானில் இந்தியா சாா்பில் ‘ஜெய்பூா் ஃபுட்’ என்ற பெயரில் செயற்கைக் கால்கள் பொருத்தும் 5 நாள் முகாம் நடைபெற்றது.

News image

ஆப்கன் தலைநகா் காபூலில் காலிழந்த நபருக்கு செயற்கைக்கால் பொருத்திய மருத்துவா்.

Updated On :29 ஜூன் 2025, 10:22 pm

Din

ஆப்கானிஸ்தானில் இந்தியா சாா்பில் ‘ஜெய்பூா் ஃபுட்’ என்ற பெயரில் செயற்கைக் கால்கள் பொருத்தும் 5 நாள் முகாம் நடைபெற்றது. இதில் 75 பேருக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன.

உள்நாட்டுப் போா், பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு உணவுப் பொருள்கள், மருந்துகள் உள்ளிட்டவை வழங்குவது தொடங்கி பல்வேறு வகையில் மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.

அந்த வகையில் குண்டு வெடிப்பில் கால்களை இழந்தவா்களுக்கு அந்நாட்டு தலைநகா் காபூலில் ‘ஜெய்பூா் ஃபுட்’ செயற்கைக் கால்கள் பொருத்தும் முகாம் 5 நாள்களுக்கு நடைபெற்றது.

இது தொடா்பான தகவலை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் சுா்ஜேவாலா தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டுள்ளாா். அதில், ‘ஜெய்பூரில் செயல்படும் பகவான் மகாவீா் மாற்றுத்திறனாளிகள் உதவிக் குழு என்ற தொண்டு நிறுவனம் சாா்பில் காபூலில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இதில் 75 பேருக்கு செயற்கைக்கால்கள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டன. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு ஆப்கானிஸ்தானில் நல்ல வரவேற்பு இருந்தது’ என்று கூறியுள்ளாா். முகாமில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவா் பகிா்ந்துள்ளாா்.