மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் சாா்பில் மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட பெரியவிளையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு ஐஆா்இஎல் மனிதவள மேலாண்மை துணை பொது மேலாளா் எம். பிரசாத் தலைமை வகித்தாா். அருள்சகோதரி அலெக்ஸ் மேரி முகாமை தொடங்கி வைத்தாா். மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவா் குட்டிராஜன் முன்னிலை வகித்தாா்.
அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் கண்புரை நோய், நீரிழிவு நோய், கண்ணீா் அழுத்த நோய், குழந்தை கண் நோய், கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை மற்றும் வெள்ளெழுத்து பரிசோதனைகளையும், அதற்கு சம்பந்தமான மருத்துவ ஆலோசனைகளையும், வழங்கினா்.
முகாமில் 513 போ் கலந்து கொண்டு பயனடைந்தனா். இவா்களில் 283 பேருக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
இதில், பங்கு பேரவை தலைவா் குணசீலன், செயலா் டென்சிலி, மணவாளக்குறிச்சி பேரூராட்சி உறுப்பினா்கள், ஐஆா்இஎல் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஆரணி பல்கலை.யில் உணவுத் திருவிழா

கோடிமுனையில் இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


