ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

இந்தியாவுக்கு 100% வரி விதிக்கப்படும்: என்ன சொல்கிறார் டிரம்ப்?

இந்தியாவுக்கு 100% வரி பற்றி டிரம்ப் கூறுவதென்ன?

News image

டிரம்ப்புடன் மோடி...

Updated On :5 மார்ச் 2025, 9:41 am IST

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கும், அந்த நாடுகள் அமெரிக்க ஏற்றுமதிப் பொருள்கள் மீது விதிக்கும் அதே வரியை விதிக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 47-வது அதிபரான டொனால்ட் டிரம்ப், ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார். அவர் பேசும்போது ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் கடுமையான அமளியில் ஈடுபட்டனர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமளிக்கிடையே அதிபர் டிரம்ப் உரையாற்றினார்.

இதற்கு முன் இருந்த அரசுகள் 4 ஆண்டுகள் அல்லது 8 ஆண்டுகளில் சாதித்ததைவிட, தன்னுடைய அரசு 43 நாள்களில் அதிகமாக சாதித்துள்ளது எனக் கூறி உரையைத் தொடங்கினார்.

இதுபற்றி டிரம்ப் பேசுகையில், “மற்ற நாடுகள் பல ஆண்டுகளாக நமது நாட்டுக்கு எதிராக வரிகளை விதித்து வருகின்றன. இப்போது அந்த நாடுகளுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

ஐரோப்பிய யூனியன், சீனா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ மற்றும் கனடா உள்ளிட்ட பிற நாடுகள் நாம் வசூலிப்பதைவிட மிக அதிகளவில் வரிகளை வசூலிக்கின்றன. இது மிகவும் நியாயமற்றது. இந்தியா எங்களிடம் 100 சதவிகிதத்துக்கும் அதிகமான வரியை வசூலிக்கிறது.

இந்த நடவடிக்கை சில பொருளாதார சீர்குலைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், அமெரிக்க தொழில்களைப் பாதுகாக்க இது ஒரு அவசியமான நடவடிக்கை.

அதிகப்படியான வரிவிதிப்புகளால் சிறிது இடையூறுகள் இருக்கும். ஆனால், நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. அது பெரிய விஷயமாக இருக்காது. அதிகப்படியான வரிகள் டிரில்லியன் டாலர்களை உருவாக்கும்” எனத் தெரிவித்தார்.

இந்த அறிவிப்புகள் ஏற்கனவே உலகப் பொருளாதாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தாலும், கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்காவுக்கு எதிராக வரிகளை விதித்துள்ளன.

அதே நேரத்தில் அமெரிக்க வர்த்தக கட்டுப்பாடுகள் அதிகரித்தால் குறிப்பிடத்தக்க விளைவுகள் ஏற்படும் என்று சீனா எச்சரித்துள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் பதற்றங்கள் அதிகரித்துள்ளதால், இந்தியாவும் எதிர்வினையாற்றுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

பரஸ்பர வரிகளிலிருந்து இந்தியா தப்ப முடியாது என்று பிரதமர் மோடியிடம் டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். வரிவிதிப்பு குறித்து யாரும் என்னுடன் வாதிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.