ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவு

மகளிர் நாள்: கூகுளின் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம்!

மகளிர் நாளையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை(டூடூல்) வெளியிட்டுள்ளது கூகுள்.

google Doodle
Published On :8 மார்ச் 2025, 1:38 pm IST

உலகம் முழுவதும் மகளிர் நாள் இன்று(மார்ச் 8) கொண்டாடப்படுவதையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை(டூடூல்) வெளியிட்டுள்ளது.

இந்தாண்டு ஸ்டெம்(STEM - Science, Technology, Engineering and Mathematics) துறைகளில் அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் துறைகளில் சாதிக்கும் பெண்களை கௌரவிக்கும் விதமாக சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை(டூடூல்) கூகுள் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக கூகுள் வெளியிட்டுள்ள செய்தியில், 'ஸ்டெம் துறைகளில் தொலைநோக்கு பார்வை கொண்ட பெண்களை நாங்கள் இந்நாளில் கௌரவிக்கிறோம். விண்வெளி ஆராய்ச்சியில் புரட்சியை ஏற்படுத்திய, பல பழமையான கண்டுபிடிப்புகளை மேற்கொண்ட, இயற்பியல், வேதியியல், உயிரியல் துறைகளில் ஆய்வக ஆராய்ச்சிக்கு முன்னோடியாக இருந்த பெண்களின் புரட்சிகரமான பங்களிப்புகளை இந்த டூடூல் எடுத்துக்காட்டுகிறது. மேலும் இந்த துறைகளில் பெண்களின் பங்களிப்பு குறைவானதுதான்.

உலக அளவில் இந்த 4 துறைகளில் பெண்களின் பங்களிப்பு 29% மட்டுமே. அனைத்துத் துறைகளிலும் பாலின சமத்துவம் வேண்டும். இதில் உள்ள இடைவெளி வருங்காலங்களில் நிரப்பப்பட வேண்டும். ' என்று கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.