விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

மறைந்த போப் பிரான்சிஸின் கடைசி ஆசை!

மறைந்த போப்பாண்டவர் தாம் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை மருத்துவ வசதிகள் அடங்கிய நடமாடும் கிளினிக் ஆக உபயோகித்துக்கொள்ள பணித்துள்ளார்

News image

மறைந்த போப் தமது திறந்தவெளி வாகனத்தில் அமர்ந்தபடி மக்களைச் சந்தித்த போது - AP

Updated On :5 மே 2025, 5:29 pm IST

வாடிகன்: மறைந்த போப் பிரான்சிஸின் கடைசி ஆசை என்ன என்பது வெளியாகியுள்ளது. போப்பாண்டவர் தாம் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை மருத்துவ வசதிகள் அடங்கியதொரு நடமாடும் கிளினிக் ஆக உபயோகித்துக்கொள்ள பணித்துள்ளார்.

”குழந்தைகள் புனிதமானவர்கள்!” என்று போப் சொல்லியிருப்பதன்படியே அவரது கடைசி ஆசையும் அவர்களுக்காவே அமைந்திருக்கிறது. தம் இறுதிமூச்சு வரை மனிதநேயத்தையும் கருணையையும் அணிகலன்களாகக் கொண்டிருந்த போப் பிரான்சிஸ், காஸாவில் நீடிக்கும் போரில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக தமது வாகனத்தை அர்ப்பணித்திருக்கிறார்.

மறைந்த போப் பயன்படுத்திய திறந்தவெளி வாகனத்தின் மாதிரி அமைப்பு

மறைந்த போப் பயன்படுத்திய திறந்தவெளி வாகனத்தின் மாதிரி அமைப்பு - AP

அங்கு பல்வேறு தாக்குதல்களில் காயப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு, அவர்களிருக்கும் இடங்களுக்கே இந்த வாகனத்தை ஓட்டிச்சென்று தேவையான சிகிச்சையளிக்க வேண்டுமென்பதே அன்னாரது விருப்பமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.