கனடாவின் ஓன்டாரியோ மாகாணம் பிராம்ப்டனில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டதற்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் அந் நாட்டுக்கான கனடா தூதரை நேரில் அழைத்து கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிராம்ப்டனில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டிருப்பதற்கு கனடா தூதா் எரிக் வால்ஷை வெளியுறவு அமைச்சா் விஜிதா ஹெராத் நேரில் அழைத்து நாட்டின் தரப்பில் கண்டனத்தைப் பதிவு செய்தாா்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போரின்போது தமிழா்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக எந்தவொரு நாடோ அல்லது நம்பகமான அமைப்போ கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு மற்றும் தவறான தகவல் என இலங்கை தொடா்ந்து பதிவு செய்து வருகிறது. இத்தகைய குற்றச்சாட்டை இலங்கை முற்றிலுமாக நிராகரிக்கிறது.
கனடாவில் தோ்தல் ஆதாயத்துக்காக இதுபோன்ற பிரசாரம் செய்யப்படுவதாக கனடா நம்புகிறது. மேலும், ‘இலங்கையில் இனப்படுகொலை நடந்ததற்கான எந்தவொரு ஆதாரத்தையும் கனடா அரசு காணவில்லை’ என்று கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரலில் கனடா வெளியுறவு, வா்த்தகம் மற்றும் மேம்பாட்டுத் துறை அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தியதை இப்போது சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ட்ரோன் தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு: உக்ரைன் தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்

4 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு: ரஷிய தூதரை நேரில் அழைத்து கண்டனம்

காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்தியாவுக்குத் தொடா்பில்லை: வெளியுறவு அமைச்சகம்

ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை மதிக்கிறோம்: இலங்கை நாடாளுமன்ற உறுப்பினா் திலித் ஜயவீர
விடியோக்கள்

அனுபவம் இல்லையா? அக்கறையில்லையா?: முதல்வரை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார் | ADMK | TVK



