காஸா மீது இஸ்ரேல் இன்று (மே 16) நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் அரசுமுறைப் பயணத்தை முடித்துக்கொண்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவுக்குத் திரும்பிய நிலையில், காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
காஸாவின் ஜபாலியா பகுதியில் இன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாக ஏபி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
படுகாயம் அடைந்தவர்கள், வடக்கு காஸாவிலுள்ள இந்தோனேஷியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
டிரம்ப் பயணத்தால் மாற்றம் ஏற்படுமா?
மத்திய கிழக்கு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப், அதனை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பிய நிலையில், வடக்கு காஸாவில் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாட்டில் டிரம்ப் மேற்கொண்ட பயணத்தின் மூலம் காஸா - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்படலாம் அல்லது காஸாவுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் தங்குதடையின்றி செல்ல வழிவகை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றும் காஸாவின் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து மூன்றாவது மாதமாக காஸாவுக்குச் செல்லும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் ராணுவம் தடுத்து வருகிறது. இதனால், அடிப்படை தேவைகளான உணவு, மருந்துகள் இன்றி தவிக்கும் நிலையே காஸாவில் உள்ளது.
ஜபாலியா அகதிகள் முகாம் மற்றும் பெயிட் லாஹியா பகுதிகளில் கடந்த சில நாள்களாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இஸ்ரேல் - காஸா போர் முடிவுக்கு வருகிறதா? டிரம்ப் அறிவிப்பு

காஸாவின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்! 6 காவல் அதிகாரிகள் உள்பட 12 பேர் பலி!

ரோமில் இஸ்ரேல் - லெபனான் அமைதிப் பேச்சு!

நள்ளிரவில் காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK



