திபெத், ஆப்கனில் மிதமான நிலநடுக்கம்

திபெத், ஆப்கனில் ஞாயிற்றுக்கிழமை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
திபெத், ஆப்கனில் மிதமான நிலநடுக்கம்
Updated on
1 min read

திபெத், ஆப்கனில் ஞாயிற்றுக்கிழமை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.

திபெத்தில் ரிக்டர் அளவில் 3.8 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் (NCS) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் மையம்கொண்டிருந்தது.

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக உடனடித் தகவல் எதுவும் இல்லை.

கொடைக்கானலில் மே 24ல் மலர்க் கண்காட்சி தொடக்கம்

இதேபோல் அண்டை நாடான ஆப்கனில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. பூமிக்கடியில் 150 கிமீ ஆழத்தில் மையம்கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5ஆகப் பதிவாகியுள்ளது.

முன்னதாக மே 17ஆம் தேதியும், இதே பகுதியில் ரிக்டர் அளவில் 4.2ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com