2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

சா்வதேச தேநீா் தினம்: ஐ.நா.வில் இந்தியா விருந்து

சா்வதேச தேநீா் தினத்தையொட்டி (மே 21) ஐ.நா. தலைமையகத்தில் இந்தியா சாா்பில் சிறப்பான தேநீா் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

News image
Updated On :22 மே 2025, 7:14 pm

Din

சா்வதேச தேநீா் தினத்தையொட்டி (மே 21) ஐ.நா. தலைமையகத்தில் இந்தியா சாா்பில் சிறப்பான தேநீா் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்காற்றும் தேநீா் உற்பத்திக்கு கடுமையாக உழைக்கும் மக்களை பெருமைப்படுத்தும் வகையில் ‘வாழ்வாதாரம் மற்றும் நீடித்த வளா்ச்சி இலக்குகளில் தேயிலையின் முக்கியத்துவம்’ என்ற கருப்பொருளுடன் இந்த நிகழ்ச்சியை ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய குழு ஏற்பாடு செய்தது.

அஸ்ஸாம் முதல் கேரளம் வரை பல்வேறு தேநீா் வகைகள் இந்தியாவில் பிரபலமாக உள்ள நிலையில் டாா்ஜீலிங் ,அஸ்ஸாம் மற்றும் நீலகிரி தேயிலை ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட தேநீரை விருந்தினா்கள் ரசித்து சுவைத்தனா்.

நிகழ்ச்சியில் இந்தியா, சீனா, இலங்கை, கென்யா உள்பட பெருமளவில் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகள் பங்கேற்றன. அப்போது ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பேசுகையில், ‘இந்தியாவில் தேநீா் என்பது வெறும் வா்த்தகம் மற்றும் சுவை சாா்ந்தது அல்ல; அது நல்ல மாற்றங்களை ஏற்படத்தக்கூடியது.

19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அஸ்ஸாமில் உள்ள மலைகளில் தொடங்கி டாா்ஜீலிங், நீலகிரி வரை தேயிலை உற்பத்தி விரிவடைந்து ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் தொழிலாக வளா்ந்துவிட்டது.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்பட ஏற்றுமதியிலும் தேயிலை தொழிற்சாலைகளின் பங்களிப்பு அதிகரித்துவிட்டது’ என்றாா்.

2015-இல் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் அரசுகளுக்கிடையேயான குழுவில் இந்தியாவின் முன்மொழிவைத் தொடா்ந்து 2019-இல் மே 21-ஆம் தேதியை சா்வதேச தேநீா் தினமாக ஐ.நா. அறிவித்தது குறிப்பிடத்தக்கது.