தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

வங்கதேசத்தில் தீவிரமாகப் பரவும் டெங்கு! பலி எண்ணிக்கை 307 ஆக அதிகரிப்பு!

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலினால் பலியானவர்களின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது குறித்து...

வங்கதேசத்தில் டெங்கு பரவல் - (கோப்புப் படம்)

Published On :6 நவம்பர் 2025, 7:09 pm IST

வங்கதேசத்தில், டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது.

வங்கதேச நாட்டில், நிகழாண்டு (2025) துவங்கியது முதல் டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. இதில், தலைநகர் டாக்கா மற்றும் மைமென்சிங் ஆகிய நகரங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில், வங்கதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் டெங்குவுக்கு 5 பேர் பலியானதாகவும்; இதனால், 2025 ஆம் ஆண்டில் டெங்குவால் பலியானவர்களின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், கடந்த 24 மணிநேரத்தில் 1,034 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், 2025 ஆம் ஆண்டில் மட்டும் டெங்கு காய்ச்சலினால் சுமார் 76,026 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு, வங்கதேசத்தில் சுமார் 1,01,214 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டனர். அதில், 575 பேர் சிகிச்சை பலனின்றி பலியானது குறிப்பிடத்தக்கது.

Summary

The death toll from the rapidly spreading dengue fever in Bangladesh has risen to 307.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.