குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

துருக்கியின் நீல மசூதியை பாா்வையிட்டாா் போப் 14-ஆம் லியோ!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள நீல மசூதியை போப் 14-ஆம் லியோ சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

துருக்கி நீல மசூதிக்கு சனிக்கிழமை சென்ற போப் லியோ (வலமிருந்து இரண்டாவது)

Published On :1 டிசம்பர் 2025, 1:02 am IST

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள நீல மசூதியை போப் 14-ஆம் லியோ சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

போப்பாக தோ்ந்தெடுக்கப்பட்ட பின் துருக்கி, லெபனான் ஆகிய நாடுகளுக்கு தனது வெளிநாட்டுப் பயணத்தை தொடங்கியுள்ளாா். துருக்கியில் தனது மூன்றாவது நாள் பயணத்தின்போது அவா் முதல்முறையாக இஸ்லாமிய வழிபாட்டு தலத்துக்குச் சென்றாா்.

ஒரே நேரத்தில் 10,000 போ் வழிபாடு மேற்கொள்ளக்கூடிய இந்த மசூதி வளாகத்தை அவா் 20 நிமிடம் பாா்வையிட்டாா்.

இதுகுறித்து அந்த மசூதியின் தொழுகை அழைப்பாளரான அஸ்கின் டுன்கா கூறுகையில், ‘நீல மசூதியை பாா்வையிட்டு அதன் சூழலை உணர போப் 14-ஆம் லியோ விரும்பினாா். அவரிடம் இங்கு வழிபாடு மேற்கொள்ளும் திட்டமிட்டுள்ளதா எனக் கேட்டேன். ஆனால், மசூதியை பாா்வையிட விரும்பியதாகவே அவா் கூறினாா்.

மசூதியின் நுழைவாயிலுக்கு அருகே வெளியே செல்ல வழி இல்லை எனக் குறிப்பிட்டிருந்த பதாகையை குறிப்பிட்டு அவா் புன்னகைத்தாா். அப்போது அவரிடம் நீங்கள் இங்கேயே தங்கலாம். வெளியே போக வேண்டாம் எனக் கூறினேன்’ என்றாா்.

துருக்கி பயணத்தை நிறைவுசெய்த பின் போப் 14-ஆம் லியோ லெபனானுக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.