ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 12 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக கூறி கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு தலைமையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் சந்தைகள், கடைகள் மற்றும் உள்ளூர் வணிகங்கள் முழுமையாக மூடப்பட்டன.
போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் ராணுவம் ஒருசில இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 12 பேர் பலியாகினர். திர்கோட்டில் 4, முஸாஃபராபாத்தில் 2, மிர்பூரில் 2 பேர் என பலியாகினர்.
அதே நேரத்தில் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் மோதல்களில் மூன்று போலீஸார் பலியானதோடு 9 பேரும் காயமடைந்துள்ளனர். முஸாஃபராபாத் இறப்புகளுக்கு பாகிஸ்தான் ரேஞ்சர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திதே காரணம் என்று அவாமி குழு குற்றம்சாட்டியுள்ளது என வட்டாரங்கள் தெரிவித்தன.
Summary
The number of civilians killed rose to 12 after a third consecutive day of violent protests in Pakistan-occupied Kashmir against the Pakistani government.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிக்கன் புலாவ், தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


