ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

உலகப் போருக்காக மன்னிப்பு கோரிய ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்!

ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முராயமா காலமானார்...

News image

ஜப்பானின் முன்னாள் பிரதமர் டோமிச்சி முராயமா - படம் - ஏபி

Updated On :17 அக்டோபர் 2025, 4:42 pm IST

ஜப்பானின் முன்னாள் பிரதமர் டோமிச்சி முராயமா, தனது 101 ஆவது வயதில் இன்று (அக். 17) காலமானார்.

ஜப்பான் அரசுக்கு, கடந்த 1994 முதல் 1996 ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பதவி வகித்த டோமிச்சி முராயமா, வயது மூப்பினால் அவரது சொந்த ஊரான ஒயிடா நகரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் முராயமா இன்று மரணமடைந்ததாக, ஜப்பானின் சோசியல் டெமோக்ரடிக் கட்சியின் தலைவர் மிசுக்கோ ஃபுக்குஷிமா தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரில், ஜப்பான் நடத்திய தாக்குதல்களுக்கு கடந்த 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, பிரதமார் முராயமா முதல்முறை அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரினார். அதையடுத்து, அவருக்குப் பின் பதவி வகித்த ஜப்பானின் பிரதமர்கள் அந்த வழக்கத்தைப் பின்பற்றி வந்தனர்.

ஆனால், கடந்த 2013 ஆம் ஆண்டு ஜப்பானின் தேசியவாதத் தலைவரும், அப்போதைய பிரதமருமான ஷின்சோ அபே, மன்னிப்பு கேட்கும் வழக்கத்தை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Summary

Former Japanese Prime Minister Tomichi Murayama passed away yesterday (Oct. 16) at the age of 101.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.