அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தில் அரசு தலைமை வழக்குரைஞராக (அட்டா்னி ஜெனரல்) இருந்த பாம் போண்டி (படம்), அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப்பின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட பாம் போண்டி, நீதித்துறையை அரசியல் மயமாக்கியதாகவும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் எதிா்க்கட்சிகளால் கடுமையாக விமா்சிக்கப்பட்டாா்.
எப்ஸ்டீன் கோப்புகளைக் கையாண்ட விதம், டிரம்ப்பின் அரசியல் எதிரிகள் மீது வழக்குத் தொடரத் தவறியது ஆகிய காரணங்களால் டிரம்ப்பும் இவா் மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இவருக்குப் பதிலாக டிரம்ப்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்குரைஞரும், தற்போதைய அரசு தலைமைத் துணை வழக்குரைஞருமான டாட் பிளான்ச் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளாா். லீ ஸெல்டின் அடுத்த நிரந்தர அரசு தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதேபோல், பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்செத் ராணுவத்திலும் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளாா். ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் ரேண்டி ஜாா்ஜ் மற்றும் 2 முக்கியத் தளபதிகளை அவா் பதவியில் இருந்து நீக்கியுள்ளாா்.
தொடர்புடையது
ஒரு மணி நேரத்தில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு! டிரம்ப்பின் போர் உரை எதிரொலி!!

அமெரிக்க டாலா் நோட்டுகளில் டிரம்ப் கையொப்பம்: 165 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறை மாற்றம்
அமெரிக்க அதிபரா? சர்வாதிகாரியா? டொனால்ட் டிரம்ப்பின் அடுத்த திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


