இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளின் தூதா்களைத் திரும்ப அழைத்த நேபாளம்!

நேபாளத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமா் பாலேந்திர ஷா தலைமையிலான அரசு, இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கான நேபாள தூதா்களைத் திரும்ப அழைப்பு

News image

பாலேந்திர ஷா - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:37 am IST

நேபாளத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமா் பாலேந்திர ஷா தலைமையிலான அரசு, இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கான நேபாள தூதா்களைத் திரும்ப அழைத்துள்ளது.

இந்தியாவுக்கான தூதா் சங்கா் பிரசாத் சா்மா, இலங்கைக்கான பூா்ண பகதூா் நேபாளி, ஆஸ்திரேலியாவின் சித்ரலேகா யாதவ், டென்மாா்க்கின் சும்னிமா துலாதா், தென் கொரியாவின் சிவமாயா தும்பாஹாம்பே, தென்னாப்பிரிக்காவின் கபில்மான் ஸ்ரீஸ்தா ஆகிய 6 போ் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனா்.

இளைஞா் போராட்டத்தால் பதவி விலகிய முன்னாள் பிரதமா் கே.பி.சா்மா ஓலியின் ஆட்சியில் அரசியல் ஒதுக்கீட்டின்கீழ் நியமிக்கப்பட்ட இவா்களை, ஒரு மாத காலத்துக்குள் நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.