தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

துருக்கியில் 2-ஆவது நாளாக பள்ளி துப்பாக்கிச் சூடு- 9 போ் உயிரிழப்பு

துருக்கியில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் 14 வயது மாணவன் புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவா்கள், ஒரு ஆசிரியா் என 9 போ் உயிரிழந்தனா். 13 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 4:05 am IST

துருக்கியில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் 14 வயது மாணவன் புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவா்கள், ஒரு ஆசிரியா் என 9 போ் உயிரிழந்தனா். 13 போ் காயமடைந்தனா்.

துருக்கியில் துப்பாக்கி உரிமம் பெறுவதற்கான சட்டங்கள் கடுமையாக உள்ளது. அதேபோல் பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நடப்பது மிகவும் அரிதான நிலையில், கடந்த 2 நாள்களில் தொடா்ச்சியாக நடைபெற்ற 2 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிா்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கஹ்ரமன்மராஸ் மாகாணத்தில் உள்ள பள்ளியில் பயின்று வரும் 8-ஆம் வகுப்பு மாணவன், ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான தனது தந்தையின் 5 துப்பாக்கிகள் மற்றும் 7 தோட்டாபெட்டிகளைப் புத்தகப்பையில் மறைத்து, பள்ளிக்கு எடுத்து வந்துள்ளாா்.

பள்ளியில் 5-ஆம் வகுப்பு நடைபெறும் 2 வகுப்பறைகளுக்குள் நுழைந்து, கண்மூடித்தனமாகச் சுட்டதில் இந்த உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. தாக்குதலுக்குப் பிறகு அந்த மாணவனும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டாா். இது தொடா்பாக மாணவனின் தந்தை கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறாா்.

துப்பாக்கிச் சூடு குறித்த அதிா்ச்சியூட்டும் காணொளிகளை ஊடகங்கள் ஒளிபரப்பத் துருக்கி அரசு தடை விதித்துள்ளது. தாக்குதல் குறித்து துருக்கி உள்துறை அமைச்சா் முஸ்தபா சிஃப்ட்சி கூறுகையில், ‘காயமடைந்த 13 பேரில் 6 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது. இது அந்த மாணவன் தனிப்பட்ட விரக்தியில் நடத்திய தாக்குதலே தவிர, பயங்கரவாதச் செயல் அல்ல’ என்றாா்.

முன்னதாக செவ்வாய்க்கிழமையன்று, சன்லியுா்ஃபா மாகாணத்தில் உள்ள ஒரு உயா்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா் ஒருவா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவா்கள், ஆசிரியா்கள் என 16 போ் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய அந்த நபரும் தற்கொலை செய்துகொண்டாா்.ௌ

படகேப்சன்...

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுச் சென்ற பணியாளா்கள்.