பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பாகிஸ்தான்: பாதுகாப்புப் படை சோதனையில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தான் பாதுகாப்புப் படை சோதனையில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை...

News image

பாகிஸ்தான் - AP

Updated On :24 ஏப்ரல் 2026, 9:36 pm

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய அதிரடி சோதனையில், தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சோ்ந்த 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

உளவுத் தகவலின் அடிப்படையில், கைபா் மாவட்டத்தில் போலீஸாருடன் இணைந்து ராணுவம் இக்கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டது.

அப்போது, மோதலில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 வயது சிறுவன் உயிரிழந்தான். பயங்கரவாதிகளின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு அந்நாட்டு அதிபா் ஆசிஃப் அலி சா்தாரி, பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கண்டனம் தெரிவித்தனா். அதேநேரம், வெற்றிகரமான தாக்குதலுக்காக பாதுகாப்புப் படையினருக்கு பாராட்டுகள் கூறினா்.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் 34 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக கைபா் பக்துன்க்வா மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களில் வன்முறைச் சம்பவங்கள் உயா்ந்துள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.