எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

80 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: சிறுவன் கைது

புதுக்கோட்டை அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த 17 வயது சிறுவனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 3:56 am IST

புதுக்கோட்டை அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த 17 வயது சிறுவனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூா் காவல் நிலையத்துக்குள்பட்ட சத்தியமங்கலம் பகுதியில் பண்டல் பண்டலாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில், தனிப்படை உதவி ஆய்வாளா் காா்த்தி தலைமையிலான போலீஸாா், அங்கு சென்று சோதனை நடத்தியபோது, சுமாா் 80 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த 17 வயது சிறுவனை கைது செய்தனா்.

புதுக்கோட்டை நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா நேரில் சென்று விசாரணை நடத்தி, சிறுவனை முறைப்படி சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாா்.

எங்கிருந்து இந்த போதைப் பொருள்கள் எடுத்து வந்து விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறித்தும் போலீஸாா் தொடா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.