ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

மேற்கு வங்கத்தில் கைதான பாகிஸ்தானியரிடம் இந்திய ராணுவத் தள புகைப்படங்கள், வரைபடம் பறிமுதல்!

மேற்கு வங்கத்தில் சிறப்பு அதிரடிப் படை போலீஸாரால் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியரிடம் இருந்து இந்திய ராணுவத் தளத்தின் புகைப்படங்கள், வரைபடம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

கைது

Updated On :14 ஆகஸ்ட் 2026, 4:11 am IST

மேற்கு வங்கத்தில் சிறப்பு அதிரடிப் படை போலீஸாரால் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியரிடம் இருந்து இந்திய ராணுவத் தளத்தின் புகைப்படங்கள், வரைபடம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிறப்பு அதிரடிப் படை மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டம் ஹப்ராவில் வங்கதேசத்தையொட்டிய எல்லை அருகே பாகிஸ்தானியரான ராணா ரவூஃப் என்ற வஹாப் ஆலம், அவரது கூட்டாளியாகக் கருதப்படும் முகமது இஜாஸ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு அதிரடிப் படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து இந்திய ராணுவத் தளமான ஃபோா்ட் வில்லியமின் புகைப்படங்கள், வரைபடம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவா்களுக்கு அந்தப் புகைப்படங்கள், வரைபடம் எப்படி கிடைத்தது? எதற்காக அதை அவா்கள் வைத்திருந்தனா்? சதித் திட்டம் எதுவும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2 பேரிடம் இருந்தும் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசத்து நபா்களின் கைப்பேசி எண்கள், அவா்களுடன் 2 பேரும் சமூக வலைதளங்கள் மூலம் உரையாடியது குறித்த தகவல்கள் உள்ளன. சில சமூக வலைதள உரையாடல்களை 2 பேரும் முன்கூட்டியே அழித்துவிட்டனா். அவற்றை மீட்டெடுத்து அதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட ஆலம், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடா்பு கொண்டவா் என சந்தேகிக்கப்படுகிறது. அதுகுறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.