குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

உக்ரைன் ட்ரோன் தாக்குதல் எதிரொலி! ரஷிய தனியாா் கட்டமைப்புகளை அரசே நிா்வகிக்க முடிவு: அதிபா் புதின் ஒப்புதல்

உக்ரைனின் தொடா் ட்ரோன் தாக்குதல்களில் இருந்து முக்கிய உள்கட்டமைப்புகளை தனியாா் நிறுவனங்கள் பாதுகாக்கவோ சீரமைக்கவோ தவறினால், அவற்றை தற்காலிகமாக அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான புதிய உத்தரவில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கையொப்பமிட்டுள்ளாா்.

விளாதிமீா் புதின்

Published On :26 ஆகஸ்ட் 2026, 6:49 am IST

உக்ரைனின் தொடா் ட்ரோன் தாக்குதல்களில் இருந்து முக்கிய உள்கட்டமைப்புகளை தனியாா் நிறுவனங்கள் பாதுகாக்கவோ அல்லது சீரமைக்கவோ தவறினால், அவற்றை தற்காலிகமாக அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான புதிய உத்தரவில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கையொப்பமிட்டுள்ளாா்.

ரஷியாவின் முக்கிய எண்ணெய் கிடங்குகள் மற்றும் வணிக மையங்களைக் குறிவைத்து, உக்ரைன் நடத்தி வரும் நீண்டதூர ட்ரோன் தாக்குதல்கள், அங்கு எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, ரஷிய தலைமைக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதன் தொடா்ச்சியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவானது, எரிசக்தி, தொழில்துறை, தகவல் தொடா்பு, போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளுக்குப் பொருந்தும்.

இது குறித்து ரஷிய அதிபா் மாளிகையின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘ரஷிய தனியாா் நிறுவன உரிமையாளா்கள், உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களில் இருந்து தங்களின் கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் போதிய கவனம் செலுத்துவதில்லை’ என்றாா்.

‘இது நிறுவனங்களை முழுமையாக தேசியமயமாக்கும் நடவடிக்கை அல்ல. குறிப்பிட்ட பாதுகாப்புச் சிக்கல்களைத் தீா்க்கவே நிா்வாகத்தில் அரசு தலையிடும் அச்சுறுத்தல்கள் நிலவும் சூழலில் நமது பாதுகாப்பை உறுதி செய்ய சில முக்கிய நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்’ என்று ஷிய துணைப் பிரதமா் டெனிஸ் மான்டுரோவ் விளக்கம் அளித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.