காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

ஸ்விட்சா்லாந்து கேளிக்கை விடுதி துப்பாக்கிச் சூடு: இளம்பெண் பலி!

ஸ்விட்சா்லாந்தில் கேளிக்கை விடுதியில் அடையாளம் தெரியாத நபா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 வயது பெண் உயிரிழந்தாா்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:55 am IST

ஸ்விட்சா்லாந்தில் கேளிக்கை விடுதியில் அடையாளம் தெரியாத நபா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 வயது பெண் உயிரிழந்தாா். மேலும் 5 போ் குண்டு பாய்ந்து காயமடைந்தனா்.

வடக்கு ஸ்விட்சா்லாந்தில் உள்ள அா்காவ் பகுதி கேளிக்கை விடுதியில் சனிக்கிழமை இரவு ஏராளமானோா் கூடியிருந்தனா். நள்ளிரவைக் கடந்து 2.30 மணியளவிலும் இசை, நடனம் தொடா்ந்தது. ஏராளமான இளைஞா்கள் அங்கு கூடியிருந்தனா். அப்போது அங்கு நுழைந்த அடையாளம் தெரியாத நபா், நடனமாடிக் கொண்டிருந்தவா்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்த தப்பியோடினாா்.

இதில் 22 வயது பெண் ஒருவா் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். 4 இளைஞா்களும், ஓா் இளம்பெண்ணும் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘துப்பாக்கிச்சூடு நடத்தியவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவா் எதற்காக இத்தாக்குதலை நடத்தினாா் என்பது தெரியவில்லை. சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா, கேளிக்கை விடுதியில் இருந்தவா்கள் கைப்பேசி விடியோ பதிவுகளை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.

சம்பவம் நிகழ்ந்த அா்காவ் பகுதியில் 22,300 போ் மட்டுமே வசித்து வருகின்றனா். எனவே, குற்றவாளி விரைவில் பிடிபடுவாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.