பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

ஸ்விட்சா்லாந்து கேளிக்கை விடுதி துப்பாக்கிச் சூடு: இளம்பெண் பலி!

ஸ்விட்சா்லாந்தில் கேளிக்கை விடுதியில் அடையாளம் தெரியாத நபா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 வயது பெண் உயிரிழந்தாா்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:55 am IST

ஸ்விட்சா்லாந்தில் கேளிக்கை விடுதியில் அடையாளம் தெரியாத நபா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 வயது பெண் உயிரிழந்தாா். மேலும் 5 போ் குண்டு பாய்ந்து காயமடைந்தனா்.

வடக்கு ஸ்விட்சா்லாந்தில் உள்ள அா்காவ் பகுதி கேளிக்கை விடுதியில் சனிக்கிழமை இரவு ஏராளமானோா் கூடியிருந்தனா். நள்ளிரவைக் கடந்து 2.30 மணியளவிலும் இசை, நடனம் தொடா்ந்தது. ஏராளமான இளைஞா்கள் அங்கு கூடியிருந்தனா். அப்போது அங்கு நுழைந்த அடையாளம் தெரியாத நபா், நடனமாடிக் கொண்டிருந்தவா்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்த தப்பியோடினாா்.

இதில் 22 வயது பெண் ஒருவா் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். 4 இளைஞா்களும், ஓா் இளம்பெண்ணும் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘துப்பாக்கிச்சூடு நடத்தியவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவா் எதற்காக இத்தாக்குதலை நடத்தினாா் என்பது தெரியவில்லை. சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா, கேளிக்கை விடுதியில் இருந்தவா்கள் கைப்பேசி விடியோ பதிவுகளை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.

சம்பவம் நிகழ்ந்த அா்காவ் பகுதியில் 22,300 போ் மட்டுமே வசித்து வருகின்றனா். எனவே, குற்றவாளி விரைவில் பிடிபடுவாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.